மாண்டஸ் புயல்: டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
இந்தியா, டிசம்பர் 8 -- மாண்டஸ் புயல் நாளை (டிச.9) இரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடக்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிகக்கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து நாளை நடைபெறவிருந்த டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்கப்படுவதாக, எதிர்பார்க்கப்படும் புயல் (Cyclonic Storm) காரணமாக, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தால் நாளை (09.12.2022) நடைபெறவிருந்த அனைத்து எழுத்த...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.