இந்தியா, மே 25 -- சிவபெருமானுக்கு மிகப்பெரிய புராண வரலாறு இருக்கின்றன. சிவபுராணம் பற்றி முழுமையாக விளக்கம் சொன்னவர் இன்றுவரை யாரும் கிடையாது என்பது ஆன்றோர் கருத்து. சிவனடியார்களுக்கு அடிப்படை வேதங்களாக திகழ்ந்து வருவது பன்னிரு திருமுறைகள் தான். அவற்றில் எட்டாம் திருமுறையான திருவாசகத்தை இயற்றியவர் மாணிக்கவாசகர் பெருமான். இது சிவபெருமானால் எழுதப்பட்ட பெருமை கொண்டதாகும்.

மாணிக்கவாசகரால் எழுதப்பட்ட திருவாசக திருமுறைகள் 51 பதிகங்களையும் 658 வரிகளையும் கொண்டதாகும். திருவாசகத்தில் சிவபுராணம் முதல் பதிகமாக. சிவபெருமானை திருப்பெருந்துறையில் குரு வடிவில் கண்ட உடனேயே மாணிக்கவாசகர் கதறி அழுது பாடிய பாடல் தான் இப்போது நாம் படிக்கக்கூடிய திருவாசகம்.

இந்தப் பாடலை அழாமல் பாடவோ கேட்கவும் முடியாது எனக் கூறப்படுகிறது. 95 வரிகளைக் கொண்ட இந்த பாடல் புராணம் ...