இந்தியா, மே 28 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். புதன் பகவான் புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

புதன் பகவான் சுக்கிரனின் ரிஷப ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் வருகின்ற ஜூன் மாதம் 6 ஆம் தேதி அன்று புதன் பகவான் தனது சொந்த ராசியான மிதுன ராசியில் நுழையுள்ளார். சுமார் ஒரு ஆண்டு கழித்து புதன் பகவான் அவருடைய சொந்தமான ராசியான மிதுன ராசியில் நுழையப் போகின்றார்.

புதன் பகவானின் மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்...