இந்தியா, ஜூன் 12 -- கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளைத்தில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் மண்வளம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றிருக்கிறது. அதனை பார்த்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சுமார் 15 கிலோ மீட்டர் காரில் பின்தொடர்ந்து சென்று நாமக்கல் அருகே உள்ள சோதனை சாவடி அருகே அந்த லாரியை மடக்கி பிடித்துள்ளார்.

பின்னர் அந்த லாரியை சோதனை சாவடியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தார். மேலும், அங்கிருந்த காவலர்களிடம் வழக்குப்பதிவு செய்யும்படி அறிவுறுத்தி இருக்கிறார். இருப்பினும் கரூரில் இருந்து மணல் கடத்தப்பட்டதால் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி நாமக்கல் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனைத...