இந்தியா, பிப்ரவரி 27 -- Swethaaranyeshwarar: அபிஷேக பிரியராக விளங்கக்கூடிய சிவபெருமான் உலகம் முழுவதும் கோயில் கொண்டு பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார். குறிப்பாக இந்தியாவில் இவருக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது. மனித உயிரினும் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன.

மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் சிவபெருமான் மீது கொண்ட பக்தியின் காரணமாக பல மன்னர்கள் பல பிரம்மாண்ட கோயில்களை நமது இந்திய நாட்டில் கட்டி வைத்து சென்றுள்ளனர். பல நூறு ஆண்டுகள் கடந்தும் அந்த கோயில்கள் இன்று வரை வானுயர்ந்து கம்பீரமாக காணப்படுகின்றன.

குறிப்பாக தமிழ்நாட்டில் வாழ்ந்த மன்னர்கள் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். அவர்கள் கட்டிய கோயில்கள் இன்று வரை அசைக்க முடியாத சிறப்பான கட்டி...