இந்தியா, பிப்ரவரி 26 -- Utrakosamangai: உலகமெங்கும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழக்கூடிய சிவ பக்தர்கள் எத்தனையோ பேர் இன்றும் இருந்து வருகின்றனர். கடவுளுக்கெல்லாம் கடவுளாக திகழ்ந்துவரும் சிவபெருமான் தமிழ்நாடு முழுவதும் திரும்பும் திசை எல்லாம் கோயில் கொண்டு பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார்.

மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் சிவபெருமான் மீது மிகப்பெரிய பக்தியை கொண்டு மன்னர்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.

மன்னர்கள் தங்கள் வாழ்ந்த காலத்தில் மிகப்பெரிய பிரம்மாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். உலகம் முழுவதும் சிவபெருமானுக்கு கோயில்...