இந்தியா, மே 1 -- உலகம் முழுவதும் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்து எத்தனையோ கோயில்கள் இன்று வரை கம்பீரமாக இருந்து வருகின்றன. அதுபோல எத்தனையோ கோயில்கள் மிகவும் வித்தியாசமாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் விளங்கி வருகின்றன. நமது இந்தியாவில் விலங்குகள் வழிபட்ட கோயில்கள், விலங்குக்கான கோயில்கள் என எத்தனையோ உள்ளன.

அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கக்கூடிய கர்னி மாதா கோயில். இந்த திருக்கோயில் எலிகளின் கோயில் எனவும் அழைக்கப்பட்டு வருகிறது. இந்த கோயிலில் எலிகள் மிகுதியாக காணப்படுவதால் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும் படிங்க| சனி யோகத்தை முழுமையாக அனுபவிக்கப் போகும் ராசிகள்

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஜோத்பூர் மாவட்டத்தில் சரண் ராஜ்புத் என்ற குடும்பத்தில் ஏழாவது மகளாக பிறந்தவர்...