இந்தியா, ஜூன் 26 -- போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவிடம் 16 மணி நேரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் கிருஷ்ணாவிடம் காவல்துறையினர் 16 மணி நேரமாக தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன்னதாக நடிகர் ஸ்ரீகாந்த் இதே வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள நிலையில், கிருஷ்ணாவிடம் நடைபெறும் விசாரணை கவனம் பெற்றுள்ளது.

சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில், நேற்று மதியம் ஒரு மணி முதல் தொடங்கிய இந்த விசாரணையில், மூன்று முக்கிய அம்சங்கள் குறித்து காவல்துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர். முதலாவதாக, கிருஷ்ணா போதைப்பொருள் பயன்படுத்தினாரா? என்பது குறித்து ஆராயப்படுகிறது. இரண்டாவதாக, அவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டாரா அல்லது போதை பொருள் விற்பனை செய்பவர்கள் உடன் தொடர்...