இந்தியா, ஏப்ரல் 21 -- போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் மற்றும் சகோதரருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஒரு வருடமாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில், ஜாமீன் கோரி ஜாபர் சாதிக் தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அமலாக்கத் துறை தரப்பில் ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன் தர கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஜாபர் சாதிக் ஆளுங்கட்சியான திமுகவின் நிர்வாகியாக இருந்தவர் மற்றும் சாட்சிகளை அழிக்க வாய...