இந்தியா, மே 18 -- விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள 'கிங்டம்' படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஜூலை 4ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப்படத்தின் புரோமோஷனில் விஜய் தேவரகொண்டா படு பிசியாக இருக்கிறார். அந்த புரோமோஷனில் அவரிடம் அவரின் கடந்த லைகர் படத்தின் படுதோல்வி குறித்து கேட்கப்பட்டது.

ஃபிலிம்பேர் உடனான நேர்காணலில் அவர் பேசும் போது, 'இயக்குநர் பூரி ஜெகன்நாத்துடன் ஒரு படத்தை உருவாக்க தான் எப்போதும் விரும்பியதாகவும், இந்த செயல்முறையை மிகவும் ரசித்ததாகவும் பேசினார்.

இந்த உரையாடலின் போது, 'லைகர் படத்தில் நான் எனது கதாபாத்திரத்தின் மீது வெறித்தனமாக இருந்தேன். தற்காப்பு கலைகளை கற்றுக்கொண்டேன். ஒரு போராளி போல தோற்றமளிக்க எனது உடலமைப்பை உருவாக்கினேன். திக்கிப்திக்கிப்பேசினேன்.

அந்தக் கதாபாத்திரம் தொடர்பான அனைத்தும் எனக்கு மிகவும் சவாலானவையா...