இந்தியா, மே 15 -- பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை போல் விருகம்பாக்கத்தில் பெண் காவலரின் இடுப்பை கிள்ளிய திமுக நிர்வாகிகளுக்கு எதிராகவும் கனிமொழி நேரில் சாட்சியம் அளிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை வலியுறுத்தி உள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு 2019 பிப்ரவரி 12 அன்று நடந்தது. பாதிக்கப்பட்ட பெண், தனது மானத்தை கருதி முதலில் புகார் அளிக்க தயங்கினாலும், பெற்றோரின் வற்புறுத்தலால் பிப்ரவரி 24 அன்று புகார் அளித்தார். அதே நாளில் அதிமுக அரசு FIR பதிவு செய்து மூன்று குற்றவாளிகளை கைது செய்தது. இரண்டு நாட்களில் நான்காவது குற்றவாளியும் கைது செய்யப்பட்டார். திமுக, இந்த வழக்கை அதிமுக தாமதப்படுத்தியதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது என்று இன்பத்துரை தெரிவித்தார்.

வழக்கில் கைப்பற்றப்பட்ட தொலைபேசியில் இருந்த 100 வீடியோக்கள் அழிக்க...