இந்தியா, ஏப்ரல் 18 -- அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சு விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுப்பார் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியது அரசியல் விவாதங்களுக்கு வித்திட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி உடன் அதிருப்தியில் உள்ளதாக கூறப்பட்ட நிலையில், செங்கோட்டையனின் இந்த பேச்சு உற்று நோக்க கூடியதாக உள்ளது.

மேலும் படிக்க:- பொன்முடி Vs செங்கோட்டையன்: 'பொன்முடி பேச்சால் 234 தொகுதிகளும் அதிமுக வெற்றி பெறும்!' செங்கோட்டையன் நம்பிக்கை!

இந்து சமயத்தையும் பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிராக, அனைத்திந்திய அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கோபிச்செட்டிப்பாளையத்தில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு பின் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங...