இந்தியா, மே 6 -- பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற 'வீரா ராஜ வீரா'பாடல் சிவா ஸ்துதி பாடலைப்போலவே உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் செலுத்த வேண்டும் என விதிக்கப்பட்ட உத்தரவுக்கு டெல்லி உயர்நீதிமன்ற டிவிசன் அமர்வு இடைக்கால தடை விதித்துள்ளது.

மேலும் படிக்க| இங்கு நிறைய விஷயங்கள் நடந்துவிட்டன.. 3 வாரங்களுக்கு பின் பேசிய குஷ்பு.. என்ன நடந்தது?

முன்னதாக, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பயன்படுத்திய 'வீரா ராஜ வீரா' பாடலின் இசை தாகருக்கு சொந்தமானது என படக்குழு தரப்பு ஒப்புக்கொண்டதால் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ரூ.2 கோடியை நீதிமன்ற பதிவாளரிடமும், ரூ .2 லட்சத்தை தாகர் பெயரிலும் டெபாசிட் செய்யவும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து, இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் டெல்லி உயர்நீத...