இந்தியா, ஜூன் 8 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.

சூரிய பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். கடந்த மே 15ஆம் தேதி அன்று சூரியன் ரிஷப ராசிக்கு சென்றார். இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். அன்றைய தினம் வைகாசி மாதம் பிறக்கின்றது. வருகின்ற ஜூன் 15ஆம் தேதி வரை சூரியன் ரிஷப ராசியில் பயணம் செய்ய உள...