இந்தியா, ஏப்ரல் 4 -- சென்னை முகப்பேரில் கார் பார்க்கிங் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் உயர் நீதிமன்ற நீதிபதியின் மகன், மனைவி உள்ளிட்டோரை தாக்கியதாகப் புகாரில், பிக்பாஸ் பிரபலமும் நடிகருமான தர்ஷன் மற்றும் அவரது சகோதரரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் நேற்று மாலை பாரி சாலை பகுதியில் தர்ஷன் குடியிருக்கும் வீட்டின் அருகில் காரினை பார்க் செய்துவிட்டு, அதன் அருகில் இருக்கும் டீக்கடையில் பெண் நீதிபதியின் மகன் ஆதிச்சூடி டீ அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அவரது மனைவி லாவண்யா, மற்றும் மாமியார் மகேஷ்வரி மீது நடிகர் தர்ஷன் மற்றும் அவரது நண்பர் லோகேஷ் தாக்குதல் நடத்தியதாக, ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது.

அதேபோல் தர்ஷன் தரப்பிலும் தங்கள் மீது சூடான டீயை ஊற்றி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ப...