இந்தியா, மே 18 -- வெள்ளை பூசணிக்காயில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. அதன் சாற்றை காலையில் வெறும் வயிற்றில் பருகும்போது உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. இந்த் காய் இந்திய மற்றும் சீன உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்தக்காயில் ஸ்ட்டூ, சாலட்கள் மற்றும் கிரேவிகள் செய்யப்படுகின்றன. இது வெள்ளரியைப் போன்ற சுவை கொண்டது. இதில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இது பல்வேறு நோய்களுகககு மருந்தாகிறது. இதில் கலோரிகள் குறைவு, இது சர்க்கரை கொழுப்பாவதைத் தடுக்கிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. உடலில் ரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதில்லை. அதை சரியான அளவில் பராமரிக்க உதவுகிறது.

இந்த பூசணிக்காயில் இருந்து தயாரிக்கப்படும் பானம், அதன் மருத்துவ குணங்களுக்காக சிறப்பான பானமாகக் கருதப்படுகிறது. இது ஆயுர்வேத பானங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது வயிற்ற...