இந்தியா, மே 25 -- இதுகுறித்து சுற்றுச்சூழல் நிபுணர் மருத்துவர் புகழேந்தி கூறியிருப்பதாவது;

பூக்கள் பேசுமா? ஆம். அதன் மொழியை மனிதர்கள் தான் இதுவரை அறிந்துகொள்ளவில்லை. இதனால், தேவையின்றி, செயற்கை வேதி உரங்களின் பயன்பாடு அதிகரித்ததால், மண்வளம் முழுமையாக பாதிக்கப்பட்டு, இயற்கை சூழல் பாழடிக்கப்பட்டு, மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடும் தேனீக்களின் வாழ்வே அழிந்து வருகிறது. இந்தியாவில் 20 சதவீதம் மற்றும் தமிழகத்தில் 20 முதல் 40 சதவீதம் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. குறிப்பாக நியோநிக்கோட்டினாய்ட்ஸ் எனும் பூச்சிக்கொல்லி மருந்து அதிகம் பயன்படுத்தப்படுவது தேனீக்களின் அழிவுக்கு ஒரு முக்கிய காரணியாக இருந்துள்ளது.

மிக அண்மையில், Francesca Barbero (பிரான்செஸ்கா பார்பெரோ) என்ற உயிரியல் பேராசிரியர், டூரின் பல்கலைக்கழகத்தில் செய்த ஆய்வு, இதுவரை பூக்க...