இந்தியா, பிப்ரவரி 27 -- புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவைக்கு வெளியே காத்திருந்த மாற்றுத்திறனாளி வியாபாரியை தேடி சென்று கடை உரிம ஆணையை முதலமைச்சர் என்.ரங்கசாமி வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பொலிவுறு நகர மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், புதுச்சேரி அண்ணா திடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடைகளை சுமார் ரூ.12.5 கோடி மதிப்பில் மறுகட்டமைப்பு பணிகள் நடைபெற்று முடிவடையும் தருவாயில் உள்ளது.

இதன் முதற்கட்டமாக, லப்போர்த் வீதியில் உள்ள 20 கடைகளும், சின்ன சுப்பராயப் பிள்ளை வீதியில் உள்ள 79 கடைகளும் கட்டி முடிக்கப்பட்டு ஏற்கனவே அங்கு கடையை நடத்தி வந்த பழைய பயனாளிகளுக்கே ஒதுக்கீடு செய்ய முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் முதலமைச்சர் ரங்கசாமி, ஒதுக்கீடு செய்யப்பட்ட 99 கடைகளுக்கான கடை ஒதுக்கீட்டு...