இந்தியா, மே 22 -- கோடை காலத்தில் குளுமையாக்கும் பானங்களை தயாரித்து பருகிக்கொண்டே இருக்கவேண்டும் என்று தோன்றும். அப்போதுதான் உங்கள் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்துக்களும் கிடைக்கும். நீங்கள் எந்த பழத்தின் சாற்றைவேண்டுமானாலும் பருகலாம். ஆனால் அவையனைத்தும் ஒரே மாதிரியான சுவையைத் தருபவையாக இருப்பதால், உங்களுக்கு போர் அடிக்கும். எனவே அன்னாசிப்பழத்தில் பீனா கொலோடா என்ற பானத்தை தயாரித்துப் பாருங்கள். அன்னாசிப்பழத்தை வெறும் பழச்சாறாக மட்டும் பருகாமல் அதில் தேங்காய்ப்பால் சேர்த்து இந்த பானத்தை தயாரிக்கவேண்டும். அதைச் செய்வது எப்படி என்று பாருங்கள். முதலில் தேங்காயையும், அன்னாசிப் பழத்தையும் எடுத்துக்கொள்ளவேண்டும். தேங்காய்ப்பாலை எடுத்து, அன்னாசிப்பழத்தின் சாற்றை பிழிந்து கொள்ளவேண்டும். அன்னாசிப்பழம் மற்றும் தேங்காயை வைத்து பீனா கொலோடாவை எப்படி செய்...