இந்தியா, ஜூன் 2 -- உலக அழகி ஓபால் சுசதா, பாலிவுட் மீது தனது ஈர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். தாய்லாந்தைச் சேர்ந்த இந்த மிஸ் வேர்ல்ட் 2025, இந்தித் திரைப்படங்கள் குறித்து சுவாரஸ்யமான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். இந்தியாவின் விருந்தோம்பல் குறித்தும் அவர் பேசியுள்ளார். மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்றதில் தனக்கு மிகுந்த பெருமை எனவும் அவர் கூறியுள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், தனது இந்தியப் பயணம் குறித்து, "நிச்சயமாக இந்தியாவுக்கு மீண்டும் வருவேன்" என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க| பேரன்புமிக்க ரசிக பெருமக்களே.. இசைஞானி இளையராஜாவிடம் இருந்து வந்த இனிமையான செய்தி..

பாலிவுட் திரைப்படங்கள் குறித்து ஓபால் சுசதா கூறியதாவது: "நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மிகுந்த பெருமையாக உள்ளது. தாய்லாந்துக்கு முதல் மிஸ் வேர்ல்ட் பட்டத்தை வென்...