இந்தியா, மே 11 -- நமது தமிழ்நாடு கோயில்களால் நிறைந்த தெய்வீக மாநிலமாக திகழ்ந்து வருகின்றது. பல மாவட்டங்கள் கோயில் நகரமாக திகழ்ந்து வந்தாலும் காஞ்சிபுரம் கோயில் நகரங்களில் களஞ்சியமாக திகழ்ந்த வருகின்றது. காஞ்சிபுரத்தில் எத்தனையோ சிறப்பு மிகுந்த கோயில்கள் காணப்படுகின்றன.

பஞ்சபூத தலங்களில் நிலத்தைக் குறிக்கக்கூடிய சிறப்பு மிகுந்த கோயிலாக விளங்கும் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் அங்கு தான் உள்ளது. இந்த கோயிலின் முக்கிய கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார். இங்கு சிவபெருமான் ஏகாம்பரேஸ்வரர் எனவும் தாயார் காமாட்சி அம்மன் என்ற திருநாமத்தில் அழைக்கப்பட்டு வருகின்றனர்.

சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த திருக்கோயில் 600 ஆம் ஆண்டு கட்டப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. உங்க வீட்ல இருக்கக்கூடிய சிவபெருமானை ப்ரித்வி லிங்கம் என...