சென்னை, மே 7 -- எல்லையில் தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு ஆத்திரமடைந்த பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 அப்பாவி காஷ்மீர் மக்கள் கொல்லப்பட்டனர். பூஞ்ச் மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதலில் 8 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அந்த வகையில், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பதிலடியாக பாகிஸ்தான் பொதுமக்களை குறிவைக்கத் தொடங்கியுள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா வலுவான தாக்குதலை நடத்தியுள்ளது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முரிட்கே மற்றும் பஹவல்பூர் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் உட்பட மொத்தம் 9 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் சுமார் 90 பயங்க...