இந்தியா, மே 27 -- தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் திட்டமிட்டப்படி வரும் ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளை கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்த வேண்டும், மின்சாதனங்களை பரிசோதனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்பப்ட்டுள்ளன.

இதுதொடர்பாகபள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 2025-26ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜுன் 2ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே, பள்ளி துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளிகளில் கீழ்க்காணும் நடைமுறைகளையும் பின்பற்றுமாறு தலைமையாசிரியர்கள் / அனைத்து வகை ...