இந்தியா, மே 24 -- சிவபெருமானின் அக்னியின் சொரூபமாக முருகப்பெருமான் விளங்கி வருகின்றார் இவர் தமிழ் மக்களின் குலதெய்வமாக திகழ்ந்து வருகின்றார் தமிழ் மொழியின் கடவுளாகவும் திகழ்ந்து வருகின்றார். அறுபடை வீடு கொண்டு தமிழ்நாட்டின் காவல் தெய்வமாக முருகப்பெருமான் திகழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் படிங்க| குரு பகவானின் கோடீஸ்வர யோகத்தை பெறுகின்ற ராசிகள் இவர்கள்தான்

கடவுள்களை துதி பாடும் மந்திரங்கள் எத்தனையோ இருப்பினும் முருகப்பெருமானின் அருளை மிக வேகமாக பெறுவதற்கு சில சக்தி வாய்ந்த மந்திரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒன்றுதான் வேல்மாறல் மந்திரம்.

எந்த வேண்டுதல்கள் இருந்தாலும் அதனை மனதில் நினைத்துக் கொண்டு இந்த வேல்மாறல் பதிகத்தை தினமும் பாடி வந்தால் குறைகள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது...