இந்தியா, மே 23 -- சம்மந்தி என்பது கேரளாவின் ஸ்பெஷல் டிஷ், இது உலர்ந்த பொடியாகவோ அல்லது சட்னியாகவோ தயாரிக்கப்படுகிறது. நீங்கள் தேங்காயில் சட்னி செய்தால், அதை ஃபிரிட்ஜில் வைக்காவிட்டால் சில மணி நேரங்களிலே அது கெட்டுவிடும். எனவே சம்மந்தியை பொடியாக தயாரித்து வைத்துக்கொண்டு நீண்ட நாட்கள் பயன்படுத்தாலம். அது சட்னியை நீண்ட நாட்கள் பாதுகாப்பதற்கு சமமானது. இந்தப்பொடியை செய்வதற்கு தேங்காய்த் துருவல் மற்றும் வறுத்த மசாலாக்களை சேர்த்துக்கொள்ளவேண்டும். தேங்காய் மற்றும் மசாலாக்களில் உள்ள ஈரப்பதம் போன பின்னர் தயாரிக்கப்படும்போது, அது உலர்ந்த பொடி கிடைக்க வழிவகை செய்கிறது. இந்தப்பொடியை காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து, சேமித்து வைத்துக்கொண்டு பின்னர் பயன்படுத்தலாம். சம்மந்தி என்றால் சட்னி அல்லது சாஸ் என்று பொருள்.

இந்த சம்மந்தியில் எண்ணற்ற வகைகள் ...