இந்தியா, ஏப்ரல் 30 -- இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க பங்கை வழங்கிய நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் விழாவில் நடிகர் அஜித்துடன் அவரது சகோதரர் அனில்குமாரும் சென்று இருந்தார்.

விருது வழங்கப்பட்ட ராஷ்டிரபதி பவன், அஜித்திற்கு எதற்காக விருது வழங்கப்பட்டது தொடர்பான விபரங்களை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்த அனில் குமார் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிரவில்லை.

இந்த நிலையில் இது குறித்து ரசிகர் ஒருவர் அவரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அனில், ஆம் நான் அஜித்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். நிச்சயம் உங்களது கேள்வியை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், நான் என்னுடைய குடும்ப புகைப்படங்களை ஆன்லைனில் பதிவிடுவது கிடையாது' என்று கூறினார். இது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இ...