இந்தியா, மே 24 -- நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. இவர் சிம்ம ராசிக்கு அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் செல்வம், செழிப்பு, பேச்சு, படிப்பு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர் இவர்.

இந்நிலையில் புதன் பகவான் மே மாதம் 23ம் தேதியன்று ரிஷப ராசிகள் நுழைந்தார். ஏற்கனவே சூரிய பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் சூரியன் புதன் இருவரும் ரிஷப ராசியில் இணைந்துள்ளனர். இதனால் புதாதித்ய ராஜய...