இந்தியா, மே 15 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை நவகிரகங்கள் மாற்றுவார்கள். அப்போது 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடிய ஒரு சூரியன் இவர் மாதத்திற்கு ஒருமுறை ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

இந்நிலையில் சூரிய பகவான் மே 15 ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார். நவகிரகங்களில் இளவரசன் பதவியை வகித்து வருபவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இந்நிலையில் வருகின்ற மே மாதம் 23ஆம் தேதி அன்று புதன் பகவான் ரிஷப ராசியில் நுழையப் போகின்றார்.

சூரியன் மற்றும் புதன் ரிஷப ராசியில...