இந்தியா, ஏப்ரல் 19 -- நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருபவர் சுக்கிர பகவான். இவர் 30 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சுக்கிரன் தற்போது குரு பகவானின் ராசியான மீன் ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மேஷ ராசிக்கு இடம் மாறுகிறார்.

குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். இதன் காரணமாக குரு பகவானோடு சுக்கிரன் இணைகிறார். குரு சுக்கிரன் சேர்க்கை மிகவும் மங்களகரமான யோகத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் உருவாக்கியுள்ள கஜலட்சுமி ராஜயோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும். இந்த ராஜயோகம் மே ஒன்றாம் தேதி வரை நீடிக்கும். அதற்குப் பிறகு குரு பகவான் ரிஷப ராசிக்கு செல்கிறார்.

குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் உருவான கஜலட்சுமி யோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும...