இந்தியா, மே 8 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்களில் தேவர்களின் குருவாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். இந்த மே மாதம் குரு பகவான் மிதுன ராசிக்கு செல்கின்றார். இந்நிலையில் வருகின்ற ஜூன் மாதம் சூரியன் மற்றும் குருபகவான் இருவரும் மிதுன ராசியில் இணைகின்றனர்.

இதனால் குரு ஆதித்ய ராஜயோகம் உருவாக உள்ளது. இந்த குரு ஆதித்ய ராஜயோகம் 12 ஆண்டுகளுக்கு பிறகு...