இந்தியா, மே 27 -- இதுகுறித்து சமூக செயற்பாட்டாளர் மருத்துவர் புகழேந்தி கூறியதாவது:

தேசிய பட்டியலின மக்கள் நல கமிஷன் (NCSC), தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநருக்கு, பட்டியலின மக்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் போனதால், பிரிவு (4), SC/ST சட்டத்தின்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பட்டியலின மக்கள் வன்கொடுமை சட்டவிதிகளின்படி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு உரிய காலத்தில் வழங்கப்பட வேண்டும். அதில் அதிக தாமதம் ஏற்பட்டதால், பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டாலும்,18 குடும்பங்கள் 2017ல் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், இழப்பை வழங்க வழக்கு தொடர்ந்தது.

தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை, வழக்கில் உரிய பதிலைத் தராமல் 7 ஆண்டுகள் இழுத்தடித்துள்ளது. 2024ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி வழக்கு நிலுவையில் இருப்பதால், இழப்பீடு தர தா...