இந்தியா, ஏப்ரல் 28 -- நடிகரும் இயக்குநருமான சமுத்திரகனி அவரது திரு. மாணிக்கம் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, தான் எடுத்த படங்கள் வரிசையாக தோல்வியை தழுவிய போது தனக்கு யாரும் வாய்ப்பு தர விரும்பவில்லை என்றும், அப்போது தன் நண்பன் சசிக்குமார் எப்படி உதவினார் என்பதையும் அவரால் தான் நாடோடிகள் எனும் வெற்றிப்படத்தை அளிக்க முடிந்ததாகவும் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க| தன் கனவு படத்தின் அப்டேட்டை தந்த ராஜமௌலி.. மீண்டும் இணையப் போகும் வெற்றிக் கூட்டணி..

நான் நாடோடிகள் படத்தோட கதைய சொல்லாத ஆளே இல்ல. டீக்கடையில உக்காந்துட்டு புதுசா யார்கிட்டயாவது கதைய மாத்தி சொன்னா, டீக்கடைக்காரர் என்ன கூப்டுஅண்ணே, இந்த சீன் முன்னாடி வரும் இதுதான் பின்னாடி வரும்ன்னு எனக்கு கரெக்ஷன் பண்ணிட்டு இருப்பாரு. ஏன்னா நான் அந்த அளவு வரவங்க போறவங்ககிட்ட எல்லா...