இந்தியா, ஏப்ரல் 8 -- 2025ஆம் ஆண்டுக்கான பங்குனி உத்திரத்திருவிழா வருகின்ற ஏப்ரல் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் முருகன் கோயில்களிலும் சிவன் கோயில்களிலும் விஷேசமாகக் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, இந்த நாளில் சிவன் -பார்வதி, முருகன் - தேவசேனா ஆகியோரின் திருமணம் நடந்தநாளாகப் பார்க்கப்படுகிறது. அதனால் பலர் தங்கள் ஊரில் இருக்கும் சிறப்புமிக்க கோயில்களுக்குச் செல்வது வழக்கம்.

இந்நிலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பலர் கோயில்களில் அபிஷேகம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில், அந்த அபிஷேகம் செய்வதற்கு முக்கியப் பொருளான வாழைப்பழம் முக்கிய மார்க்கெட்டான வத்தலக்குண்டு மார்க்கெட்டில் விலை கூடியிருக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேவை இருப்பதால் வியாபாரிகளும் அதை போட்டி போட்டிக்கொண்டு அள்ளிச் செல...