இந்தியா, மே 22 -- குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் எனக் கூறுவார்கள். அந்த அளவிற்கு தமிழ் மக்களின் குலதெய்வமாக முருக பெருமான் திகழ்ந்து வருகின்றார். ஆறுபடை வீடு கொண்டு தமிழ் மக்களை காக்கும் கடவுளாக முருக பெருமான் திகழ்ந்து வருவதாக சான்றோர்கள் கூறுவது உண்டு.

அந்த வகையில் முருகனுக்கு அனைத்து ஊர்களிலும் எத்தனையோ சிறப்பு மிகுந்த கோயில்கள் காணப்படுகின்றன அந்த வரிசையில் இருக்கக்கூடிய கோயில்தான் கடலூர் மாவட்டத்தில் சேத்தியாத்தோப்பில் இருக்கக்கூடிய அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில்.

மேலும் படிங்க| செவ்வாய் பணக்கார யோகத்தை கொடுக்க போகும் ராசிகள் இவர்கள் தான்

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த சேத்தியாத்தோப்பு மிகப்பெரிய விவசாய கிராமமாக திகழ்ந்து வந்துள்ளது. இங்கு வசித்து வந்த மக்கள் கடலூர் பாடலீஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய...