இந்தியா, ஜூன் 22 -- தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரபரப்பு இப்போதே கட்சிகளுக்கிடையே தொடங்கிவிட்ட நிலையில், தற்போது லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் சர்வே ரிப்போர்ட் வெளியாகி மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.

சட்டப் பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி, வாக்குறுதிகள், பரப்புரை போன்றவற்றை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வந்த திமுகவும் அதிமுகவும் தங்களது திட்டங்களை வகுத்து வருகிறது. அவர்களுக்கு இணையாக அதன் கூட்டணி கட்சிகளும், புதிதாக வந்த கட்சிகளும் தங்களது பலத்தை நிரூபிக்க ஆவண செய்ய திட்டமிட்டு ஆலோசித்து வருகின்றன.

இந்த சமயத்தில் தான், அதிமுகவினர் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் அமைப்பு நடத்திய சர்வே முடிவுகளை பகிர்ந்து மகிழ்ந்து வருகின்றனர். அந்த அறிக்கை படி, திமுக கூட்டணியில் ஏழு ...