இந்தியா, மே 25 -- நீலகிரிக்கு மூன்றாவது நாளாக ரெட் அலர்ட் காரணமாக கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. அவலாஞ்சியில் 20 செமீ மழை பதிவானது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், மாவட்ட நிர்வாகம் இன்று மற்றும் நாளைக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. குறிப்பாக கூடலூர், பந்தலூர் மற்றும் அவலாஞ்சி பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:- "தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியது" வானிலை மைய இயக்குநர் அமுதா அறிவிப்பு

கடந்த இரண்டு நாட்களாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருகிறது. அவலாஞ்சி பகுதியில் 20 சென்டிமீட்டருக்கு மேல் மழை பதிவாகியுள்ளது. இன்று காலை முதல் கனமழையுடன் கூடிய பலத்த காற்று வீ...