இந்தியா, மே 17 -- இதுகுறித்து சுற்றுச்சூழல் நிபுணர் மருத்துவர் புகழேந்தி கூறியிருப்பதாவது:

தமிழக அரசு அடையாறு ஆற்றை மீட்க ரூ.1,500 கோடியை ஒதுக்கினாலும், அந்த திட்டம் இன்னும் துவங்கவேயில்லை. நீர்நிலைகளை காக்க போதிய சட்டங்கள் தமிழகத்தில் இருந்தாலும், ஓராயிரம் தீர்ப்புகள் நீர்நிலை ஆக்கிரமிப்பிற்கு எதிராக இருந்தும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு துளியும் கருணை காட்டக்கூடாது என பல தீர்ப்புகள் வந்தாலும் நடைமுறையில் அவை சாத்தியமாவதில்லை.

2023லேயே தமிழக பட்ஜெட்டில் அடையார் ஆறு சீரமைப்பு பேசப்பட்டாலும், 2025 பட்ஜெட்டில் திரு.வீ.க. நகர் - சைதாப்பேட்டை வரையிலான அடையார் ஆற்றை, ஆக்கிரமிப்புகளை அகற்றி, சீரமைக்கும் பணி முதல் 15 மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டது இன்னும் துவங்கவில்லை.

தமிழக அரசு இதற்காக தனி நிறுவனத்தை கடந்த ஆண்டு உருவாக்...