இந்தியா, ஜூலை 2 -- நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி முகமது கோலம் மோர்துசா மொஜும்தார் தலைமையிலான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் -1 இன் மூன்று பேர் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியதாக டாக்கா ட்ரிப்யூன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பதவி விலகி 11 மாதங்களுக்கு முன்பு நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் அவாமி லீக் தலைவர் ஷேக் ஹசீனாவுக்கு தண்டனை வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....