இந்தியா, ஏப்ரல் 2 -- ஹைதராபாத் நகரின் காஞ்சா கச்சிபௌலி பகுதியில் இருக்கும் 400 ஏக்கர் ஹைதராபாத் பல்கலைக்கழக நிலத்தை தெலங்கானா தொழில்துறை உள்கட்டமைப்பு கார்ப்பரேஷன் (TGIIC - Telangana Industrial Infrastructure Corporation) மூலம் ஏலம் விடுவதற்கான தெலங்கானா அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து, ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் ஏப்ரல் 1ஆம் தேதி காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தைத் தொடங்கினர்.

இதுதொடர்பாக யுஓஎச் மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் ஆகாஷ் குமார் பேசுகையில், "TGIIC-யால் நடந்து வரும் காடழிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க காவல் துறை அதிகாரிகள் எங்களை வளாகத்தின் வாயிலுக்கு வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. காஞ்சா கச்சிபௌலி நூற்றுக்கணக்கான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் தாயகமாக உள்ளது.

TGIIC பணிகளை உடனடியாக நிறுத்தவும், வளாகத்தில் இருந்து...