இந்தியா, ஜூன் 4 -- நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று பெருநகர சென்னை மாநகராட்சி வடபழனி, அம்மன் கோயில் தெரு, சிம்ஸ் மருத்துவமனை அருகில், தியாகராயநகர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.75 மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டுத் திடல் மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்காவினை மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த கே.என். நேரு பேசியதாவது, ' விரைவில் பருவ மழை பொழிய இருக்கிறது. முதலமைச்சர் ஏற்கனவே இது தொடர்பாக அனைத்து அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களை அழைத்து, எல்லா இடங்களிலும் மழை வரப்போகிறது.

அதற்கான அடிப்படை வசதிகளை செய்வதற்கான உத்தரவை பிறப்பித்து விட்டார். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. குறிப்பாக மெட்ரோ இருக்கும் இடங்களில் பிரச்சினைகள் இருப்பதை கவனித்து அதற...