இந்தியா, மே 16 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சந்திர பகவானுக்கு பிறகு அடுத்தபடியாக குறுகிய காலத்தில் தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர் புதன் பகவான். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

அந்த வகையில் தற்போது புதன் பகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த மே மாதம் 23ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்கு புதன் பகவான் செல்கின்றார். இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். அதன் பின்னர் ஜூன் மாதம் 6ஆம் தேதி அன்று புதன் பகவான் மிதுன ராசிக்கு செல்கின்றார். சுமார் ஒரு ஆண்டு கழித்து தனது சொந்தமான ராசியான மிதுன ராசிக்கு புதன் பகவான் செல்கின்றார்.

புதன் பகவான...