இந்தியா, ஏப்ரல் 30 -- சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கையில் சாதி கணக்கெடுப்பை சேர்க்க அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு முடிவு செய்துள்ளதாக அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்தார்.

மேலும் படிக்க:- வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டுமா? அட்சயதிருதி நாளில் செய்ய வேண்டியவை என்ன? ஜோதிடர் கூறும் வழிகள்!

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ், ஊடகங்களிடம் பேசுகையில், "பிரதமர் மோடியின் தலைமையில், அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை இணைக்க முடிவு செய்துள்ளது. இது சமூக நலன்களுக்கும் மதிப்புகளுக்கும் அரசு உறுதிபூண்டுள்ளதை நிரூபி...