பிரக்யராஜ், மார்ச் 30 -- ஒன்பது நாள் சைத்ர நவராத்திரி விழா தொடங்குவதற்கு முன்னதாக, உத்தரபிரதேசத்தில் உள்ள யோகி ஆதித்யநாத் அரசு, சட்டவிரோத இறைச்சிக் கூடங்களை மூடவும், மதத் தலங்களிலிருந்து 500 மீட்டருக்குள் இறைச்சி விற்பனையைத் தடை செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

ஏப்ரல் 6 ஆம் தேதி ராம நவமிக்கு சிறப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும், அப்போது விலங்குகளை கொல்வது மற்றும் இறைச்சி விற்பனை முற்றிலும் தடை செய்யப்படும் என்றும் PTI அறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | University of Kerala: '71 மாணவர்களின் விடைத் தாள்கள் மாயம்..' கேரள பல்கலைகழக சம்பவத்தால் அதிர்ச்சி!

உத்தரப்பிரதேச அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இறைச்சி கூடங்களை உடனடியாக மூடவும், மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கவும் அனைத்து மாவட்ட நீதி...