இந்தியா, ஏப்ரல் 18 -- மாணிக்கவாசகர்: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான். இருப்பினும் நமது தமிழ்நாட்டில் திரும்பும் திசை எல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போட்டி போட்டுக்கொண்டு மிகப்பெரிய கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். அப்படிப்பட்ட சிவபெருமான் கோயில்கள் இன்று வரை வானுயர்ந்து கம்பீரமாக காணப்படுகின்றன.

பல சிவபெருமான் கோயில்கள் பல வரலாறுகளை சுமந்து கொண்டு வாழ்ந்து வருகின்றன. இதுபோல எத்தனையோ சிறப்பு மிகுந்த கோயில்கள் நமக்கு தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் கொள்ளுக்காடு அருள்மிகு யோகாம்பாள்...