இந்தியா, மே 7 -- ஆதிகாலம் தொடங்கி இன்று வரை மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்திருக்க கூடியவர் சிவபெருமான். தமிழ்நாடு முழுவதும் எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் பாகுபாடு இல்லாமல் அனைவரும் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்களால் கட்டப்பட்ட கோயில்கள் இன்று வரை வானுயர்ந்து பிரம்மாண்டமாக காணப்படுகின்றன.

நவகிரகங்களின் தலைநகரமாக கும்பகோணம் விளங்கி வந்தாலும் அதற்கு எந்த அளவிலும் குறைவில்லாத கோயில் நகரமாக காஞ்சிபுரம் விளங்கி வருகிறது. பழமை வாய்ந்த தலைசிறந்த சிறப்பு மிகுந்த கோயில்கள் நமது காஞ்சிபுரத்தில் இருந்து வருகின்றன.

அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த திருக்கோயில்களில் ஒன்றுதான் காஞ்சிபு...