இந்தியா, ஏப்ரல் 25 -- திருநெல்வேலியில் உள்ள புகழ்பெற்ற அல்வா கடையான இருட்டுக்கடை அல்வா மீது கடந்த சில நாட்களாகவே பெரும் சர்ச்சை எழுந்து வருகிறது. இருட்டுக்கடை அல்வா கடையை நடத்தி வரும் ஹரிசிங் மற்றும் கவிதா ஆகியோர் மகள் ஸ்ரீ கனிஷ்காவிற்கும் கோயம்புத்தூரை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்து முடிந்தது. ஆனால் திருமணம் ஆன ஒரே மாதத்தில் இருட்டுக்கடை அல்வா கடையையும், ஒன்றரை கோடியையும் வரதட்சணையாக கேட்டு பல்ராம் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்துவதாக கவிதாவின் குடும்பத்தினர் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தனர்.

மேலும் படிக்க | இருட்டுக்கடை அல்வா: 'என் கணவர் வெளிநாடு தப்ப முயற்சி!' இருட்டுக்கடை அல்வா உரிமையாளரின் மகள் மீண்டும் புகார் மனு!

இந்த புகாரில் இணைக்கப்பட்டுள்ள பல்ர...