இந்தியா, மே 17 -- இட்லிகடை, இதயம் முரளி, பராசக்தி, எஸ்.டி.ஆரின் 49 உள்ளிட்ட படங்களைத் தயாரித்து, ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 500 கோடிக்கு மேல் முதலீடு செய்திருக்கும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் 2 வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஆகாஷ் ஈடுபட்டு வருவதாக, அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இந்த நிலையில், நேற்றைய தினம் டாஸ்மாக் ஊழல் தொடர்பாக பல அதிகாரிகள் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, அத்துடன் தேனாம்பேட்டையில் உள்ள ஆகாஷ் வீட்டிலும் சோதனையை மேற்கொண்டது. இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாகவும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | ராஜமெளலி மீதான அதிருப்தி-'தாத்தா வாழ்க்கைய படமா எடுக்க எங்ககிட்ட அனுமதி வாங்க ...