இந்தியா, ஜூன் 7 -- தொகுதி மறுவரையறை என்ற பெயரில் இல்லாத பூதத்தை உருவாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகீரத பிரயத்தனம் செய்வதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2027-ஆம் ஆண்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்று மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது முதலே, தமிழக முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் தூக்கத்தை தொலைத்து தவிக்கிறார்.

தொகுதி மறுவரையறை என்ற பெயரில் இல்லாத பூதத்தை உருவாக்க பகீரத பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார். மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ஆம் ஆண்டிற்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க, பாஜக சதி செய்வதாக திரு.ஸ்டாலின் மீண்டும் மீண்டும் பொய்யைச் சொல்லி வருவது, அவர...