இந்தியா, ஜூன் 6 -- தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் புலி வருது, புலி வருது" என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்து உள்ளார்.

தமிழ்நாட்டில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவரும், ஆதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் ஏற்பட்டால், அதனை எதிர்க்கும் முதல் குரலாக தனது குரல் இருக்கும் என அவர் உறுதியாகக் கூறியுள்ளார். எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட அவர், தனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனவும், தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தபோது ஏற்கனவே வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டால...