இந்தியா, மே 8 -- தைபே ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி வியாழக்கிழமை தனது சக நாட்டவரான கிடாம்பி ஸ்ரீகாந்தை தோற்கடித்து ஆண்கள் ஒற்றையர் காலிறுதிக்கு முன்னேறினார்

பேட்மிண்டன் தரவரிசையில் 44-வது இடத்தில் உள்ள ஆயுஷ் ஷெட்டி 21-16, 15-21, 21-17 என்ற செட் கணக்கில் உலக தரவரிசையில் 82-வது இடத்தில் உள்ள ஸ்ரீகாந்தை வீழ்த்தினார்.

20 வயதான ஆயுஷ் ஷெட்டி இந்த ஆண்டில் தனது சீனியர் சக வீரருக்கு எதிராக பெற்ற இரண்டாவது வெற்றி இதுவாகும். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இந்தோனேசியா மாஸ்டர்ஸ் போட்டியில் முன்னாள் உலக நம்பர் 1 மற்றும் உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற ஸ்ரீகாந்தை ஷெட்டி தோற்கடித்தார்.

மேலும் படிக்க | உலக பேட்மிண்டன் தரவரிசை.. சாத்விக் - சிராக் ஜோடி பின்னடைவு.. பி.வி. சிந்து முன்னேற்றம் - முழு விவரம்

மகளிர் ஒற்றையர் பிரிவில் உன்னத...